×

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: ஆதிதிராவிட மக்களுக்கு முடிதிருத்தம் செய்ததால் முடிதிருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதால், அந்தத் தொழிலாளி மீண்டும் ஊருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.எஸ்.சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா, ஏழுமலை, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை தாசில்தாரிடம் வழங்கினர். மேலும், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முடிதிருத்துவோர் தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Tags : Demonstration ,barber unions , Demonstration by barber unions
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்