கோவை: கோவையில் மாநில பாஜ துணைதலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், பாஜ தேசிய தலைமை ரொம்ப பிஸியாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாநில தலைவர் முருகன் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர், கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதைதான் சொல்லி இருந்தார். இதை அதிமுகவினர் புரிந்து பேச வேண்டும் என்றார்.