×

200 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள குப்பன்கண்டிகை, அருங்குளம், மாமண்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் புறக்கடைக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 200 குடும்பங்களுக்கு தலா 25 கோழிகுஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவாலங்காடு ஒன்றிய குழுத்தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணைச்செயலாளர் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தணிகாசலம், சரண்யா முரளி, அம்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : families , Chickens for 200 families
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...