சென்னை: 20 சதவீத இடஒதுக்கீடு கோரி அடுத்தகட்ட போராட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி முதல்கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டு அறவழியில் போராடத் தொடங்கினோம்.
இரண்டாம் கட்டமாக கடந்த 13ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடந்தது. 3ம் கட்ட போராட்டம் வரும் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 528 பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தி, மனு கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.