×

துபாயில் இருந்து சென்னைக்கு காலில் பேண்டெய்ட் ஒட்டி தங்கம் கடத்திய 5 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நோபர் (28), அகமது அலி (31), காஞ்சிபுரத்தை சேர்ந்த நந்தகுமர் (23), சென்னையை சேர்ந்த முருகானந்தம் மோகன் (38), புதுக்கோட்டையை சேர்ந்த சதாம் உசேன் (25) ஆகிய 5 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் 5 பேரையும் நிறுத்தி  சோதனை நடத்தினர். அப்போது அவர்களின் உள்ளாடைகள் மற்றும் பேண்ட் பாக்கெட்களில்  மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்களை கைப்பற்றினர். அதோடு அவர்களில் காஞ்சிபுரம், சென்னையை சேர்ந்த 2 பயணிகள் தங்கக்கட்டிகளை தங்களுடைய கால்களின் அடிப்பாதங்களில் மறைத்து வைத்து பேண்ட்டேய்ட் போட்டு ஒட்டியிருந்தனர். 5 பேரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1.7 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ₹87.6 லட்சம்.  தங்கத்தை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர்.



Tags : Chennai ,Dubai , Five arrested for smuggling gold from Dubai to Chennai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...