×

ஐகோர்ட்டில் ராபர்ட் பயாஸ் மனு புழல் சிறையில் முதல் வகுப்பு வேண்டும்

சென்னை:  ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். சிறையில் கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. முதுகலை பட்டதாரியான எனக்கு, முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிட வேண்டும். முதல் வகுப்பு சிறை வசதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விண்ணப்பிக்கும்படி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தவின்படி, சிறை கண்காணிப்பாளர் மூலமாக உள்துறை செயலாளருக்கு விண்ணப்பித்து ஒருமாத காலமாகியும், அது பரிசீலிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் புழல் சிறை கண்காணிப்பாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டதுடன் இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், சிறை கண்காணிப்பாளர், சிபிஐ ஆகியோருக்கும் உத்தரவிட்டார்.

Tags : Robert Bios ,prison ,class , Robert Bios petition in iCourt to have first class in prison
× RELATED கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை...