சென்னை: தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா அடையாறு ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் பிஜூ சாக்கோ தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொன்.வில்சன், அனுராதா அபி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாநில நிர்வாகிகள், ஆர்.எஸ்.முத்து, ராணி கிருஷ்ணன், பானு லாரன்ஸ், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்பாஸ் வரவேற்புரையாற்றினர். மாவட்ட தலைவர்கள் ஜவஹர் பாபு, கிண்டி மம்மு, கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், அருண்குமார், ரவிச்சந்திரன், ராம்குமார், பாலா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிரியார்கள் ஸ்டான்லி இக்னிடியஸ், நல்லயன், மணிசேகர், ஜேசுதாஸ், தனிசிலஸ், ராணி பிரகாஷ் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினர்.
விழாவில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: பொங்கல் பரிசாக 2,500 வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் விலையை குறைக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். எனவே காஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.