சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணு பிரசாத் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு ரேஷன் கார்டுக்கு 2,500 ரூபாய் வீதம் வழங்கப்படப்போவதாக செய்திகள் வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலே முடங்கியிருந்த மக்களுக்கு அப்போது ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி. பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் மலிவு விலையில் விற்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்மா குடிநீர் காணாமல் போய்விட்டது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு தனியறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிலே இல்லை. குடிப்பதற்கே தண்ணீர் கொடுக்காத அரசு தமிழக மக்களை இப்போது தண்ணீர் குடிக்க செய்து தேர்தலை மனதில் வைத்து மோடி மஸ்தான் வித்தைகளை காட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.