×

தஞ்சை அம்மாப்பேட்டையில் ரெட்கிராஸ் சார்பில் 800 மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள ரெஜினாசேலி துவக்கப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல் மற்றும் புதிய மாற்று திறனாளிகளுக்கு உடல் ஆய்வு சான்று வழங்குதலும் நடைபெற்றது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நா.சுஜாதா முன்னிலை வகுத்து பயணாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முகாம் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் மற்றும் துணை கிளையின் ரெட்கிராசர்கள் சேர்மன் தர்ம. புருஷோத்தமன், செயலர் வ.இராமநாதன், மா.பி.சேவியர் , சண்முக சுந்தரம் இணைசெயலர் ரா.அன்புக்கரசு, திட்டபணிகுழு தலைவர் அ.அந்தோணி பிச்சை, PRO.ரமணி திட்டபணி உறுப்பினர் கி.ரெத்தினம் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



Tags : persons ,Tanjore Ammapettai ,Red Cross , Ammapettai, Red Cross, Smart Card for 800 alternatively abled
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு...