×

வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடர பிரார்த்தனை செய்கிறேன்: கோவா விடுதலை தினத்தையொட்டி மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவா மாநிலம், 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. பனாஜியில், 60-வது கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை நடைபெறும் சிறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

இதற்கிடையே, கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கோவா விடுதலை தினத்தன்று கோவாவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். கோவாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்களைப் பெருமையுடன் நினைவு கூர்கிறோம். இந்த மாநிலத்தின் வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடர பிரார்த்தனை செய்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Modi ,occasion ,Independence Day ,Goa , I pray that the development will continue in the years to come: Prime Minister Modi congratulates the people of Goa on the occasion of Independence Day
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...