×

கார் சக்கரத்தில் சிக்கி பலியான மலைப்பாம்புக்கு இறுதிச்சடங்கு செய்த மக்கள்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மலைப்பாம்பிற்கு, இறுதிச்சடங்கு செய்து, கிராம மக்கள் புதைத்தனர். பர்கூர்- திருப்பத்தூர் சாலை மல்லப்பாடி நாடார்கொட்டாய் கிராமத்தில் நேற்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, சாலையை கடந்துள்ளது. அப்போது அவ்வழியே வந்த காரின் சக்கரத்தில் மலைப்பாம்பு சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் இறந்து கிடந்த மலைப்பாம்பிற்கு இறுதி சடங்கு செய்தனர். பாடை கட்டி பாம்பை தூக்கிச்சென்று, அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் புதைத்து வழிபட்டனர்.

Tags : Funeral services for a mountain snake that got stuck in the wheel of a car
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...