சென்னை: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியது ஏற்புடையது அல்ல, மேலும், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.
டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று அந்த சின்னத்தை பெற்று இருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. முன்னதாக டார்ச்லைட் சின்னத்தை மக்கள் நீதி மையத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அந்த சின்னம் மக்கள் நீதி மையத்தில் ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
மக்கள் நீதி மையம் சார்பாக எங்களுக்கு தமிழகத்திலும் அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று அந்த சின்னத்தை வைத்திருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. டார்ச்லைட் சின்னத்தை பெற்றிருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது.