×

காஞ்சிபுரம் சரகத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: டிஐஜி உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 14 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தவிட்டுள்ளார். 3  ஆய்வாளர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காலால்துறை இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்  மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். காஞ்சி தாலுகா இன்ஸ்பெக்டராக கடந்த 7 மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்த மைனர்சாமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். காஞ்சிபுரம் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப்  காத்திருப்போர் பட்டியலிலும், சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல்  சத்தியவாணி, கீதாலட்சுமி உள்பட 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.



Tags : Inspectors , Transfer of 14 Inspectors in Kanchipuram Goods: DIG Order
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்