×

ஒரகடம் அருகே 4 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரி மீட்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே, 4 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக, அவரை கடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (45). அதே பகுதியில் மீன், இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு ராஜன், வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், ராஜனை கத்திமுனையில் மிரட்டி பைக்கில் ஏற்றி சென்றனர். தேவேரியம்பாக்கம் அருகே சங்கராபுரம் கிராமத்தில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, ராஜனிடம் 4 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், அவரது மனைவிக்கு போன் செய்து, சாலவாக்கம் அருகே எடமச்சி மலைக்கு பணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். பணத்தை கொடுக்காவிட்டால் உனது கணவரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.

இதுகுறித்து அவரது மனைவி, ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், அப்பகுதிக்கு சென்றனர். இதையறிந்த மர்மநபர்கள், எடமச்சி மலைப்பகுதியில் ராஜனை விட்டுவிட்டு பைக்கில் தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், நேற்று காலை ராஜனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பிவு செய்து, மீன் வியாபாரி ராஜனை கடத்தியது யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : fishmonger ,Oragadam , 4 lakh abducted fishmonger rescued near Oragadam: Police web for mystics
× RELATED லாரி மோதி காவலாளி பலி