ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம், அமுதூர் மேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாமக நிர்வாகி. கடந்த 14ம்தேதி மாலை கார்த்திகேயன் பட்டாபிராம்- பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமுதூர்மேடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் கம்பெனி பஸ், பைக் மீது மோதியது. இதில், கார்த்திகேயன் படுகாயமடைந்து பலியானார். இதனை பார்த்த, டிரைவர் பஸ்சை நடுரோட்டில் விட்டுவிட்டு கம்பெனி ஊழியர்களுடன் தப்பி ஓடினார். ஆத்திரம் அடைந்த, ஊர் பொதுமக்கள் சிலர் பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்ஸை எரித்த ஒருவரை கைது செய்தனர். 10க்கும் மேற்பட்டோரை தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டாபிராம், அணைக்கட்டுசேரியை சேர்ந்த செல்வகுமார் (23), அமுதூர்மேட்டை சார்ந்த கீர்த்திராஜன் (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.