சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: மோடி போட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களை மட்டும் அல்ல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் சட்டங்களையும் கிழித்தெறியும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும். ஆகையால் தான் தமிழகத்தில் இன்று புதிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. இது உண்மையான ஆட்சிமாற்றத்திற்கான எழுச்சி. அதேபோல் இது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் மட்டும் அல்ல. இரண்டாவது சுதந்திர போராட்டமாக இந்த போராட்டத்தை துவங்கி இருக்கிறோம்.