டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச விவசாயிகள் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். முந்தைய அரசு, பருப்பு வகைகளை கொள்முதல் செய்யாத நிலையில் அதனை பாஜக அரசு செய்து வருகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.