ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மோசூர் என்ற இடத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி காரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். மோசூர் பகுதியில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி அமைச்சரின் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.