சென்னை: கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகியவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.