×

நெல்லையில் உள்ள பாபநாசம் அணை மற்றும் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் அணை நிரம்பின

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை கனமழையால் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது. அணைக்கு வரும் 1,200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக நெல்லையில் உள்ள பாபநாசம் அணையும் நிரம்பியதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் முழு கொள்ளளவான 143 அடியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.40 அடியாக இருக்கிறது.

Tags : Papanasam Dam ,Veedur Dam ,Nellai ,Vikravandi , Papanasam Dam, Veedur Dam
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!