×

சிறப்பு நீதிமன்றம் உத்தரவு சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (36). தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த 2015 செப்டம்பரில், காளிதாஸ்,  கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார், காளிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி அம்பிகா, சிறுமியை பலாத்காரம் செய்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி காளிதாசுக்கு  10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து காளிதாசை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : teenager , Special court orders 10-year jail term for teenager who raped girl
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை