மதுரை: மதுரை மாவட்டம், துவரிமானில், மினி கிளினிக் திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘திராவிட இயக்கம் வந்த பின்பு தான் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. பெண்கள் எல்லா துறையிலும் உயர வேண்டும் என நினைத்தது திராவிட இயக்கம். ஏசி அறையில் இருந்து கொண்டே எல்லோரும் உடனடியாக முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.
தமிழக மக்கள் என்ன முட்டாள்களா? நடிகர்கள் புற்றீசல் போல் வந்துள்ளனர். சினிமாவில் மட்டும் தான் உடனடியாக முதல்வராக முடியும். தமிழகத்தை திராவிட இயக்கம் மட்டுமே ஆளும். வேறு யாருக்கும் தமிழகத்தில் இடம் கொடுக்கப்படாது’’ என்றார்.