சிக்கமகளூரு: மாவட்டம் முழுவதும் வரும் 22ம் தேதி ஒரே கட்டமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் நடக்கும் வார சந்தைகளுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் உத்தரவிட்டார்.
இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிக்கமகளுரு மாவட்டத்தில் நடைபெறவுள்ள தத்த ஜெயந்தி விழாவையடுத்து மாவட்டம் முழுவதும் வரும் 22ம் தேதி ஒரே கட்டமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது. இதையடுத்து மல்லேனஹள்ளி மற்றும் சக்கராயபட்டணா ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் வாரச்சந்தை டிச.22ம் தேதி செவ்வாய்க்கிழமை வருவதால் அன்றைய தினம் நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அன்றைய தினம் பொது மக்கள் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.