பெங்களூரு: மஜத தலைவர் குமாரசாமியின் 61வது பிறந்த நாள் விழா, கடந்த செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் குமாரசாமி இந்த விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிக்கமகளூரு மாவட்டம் முல்லையங்கிரி பகுதியில் உள்ள தனியார் ரெசாட்டிற்கு ஓய்வு எடுக்க சென்றிருந்தார்.இதுகுறித்து சிக்கமகளூருவை சேர்ந்த மஜதவினருக்கு தெரியவந்தது. அவர்கள் குமாரசாமிக்கு ரகசியமாக பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து முல்லையங்கிரி பகுதிக்கு சென்ற மஜத பிரமுகர் செரீப் தலைமையிலானவர்கள், கேக் ஆர்டர் செய்து, குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர் பின்னர், தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.