சென்னை: எதை குறித்தும் கவலைப்படாமல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து கண்டனத்திற்குரியது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வு காண முன் வருகிறது. கருத்தொற்றுமை, ஜனநாயகம் என்ற உன்னதமான பாதைக்கு மத்திய பாஜக அரசு திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.