×

பாம்பன் பாலத்தை கடந்து கப்பல்கள் மும்பை பயணம்

ராமேஸ்வரம்: பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து நேற்று இரண்டு மிதவை கப்பல்கள் மும்பை சென்றன. காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடல் வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதிக்கு வந்து 2 மிதவை கப்பல்கள், நேற்று பாம்பன் ரயில் பாலத்தை கடந்து மும்பை துறைமுகத்திற்கு சென்றன. இதையொட்டி நேற்று பகல் 12 மணியளவில் 2 கப்பல்களும், தூக்குப்பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மும்பை நோக்கி சென்றன. இதனைத்தொடர்ந்து மீன்பிடி விசைப்படகுகளும் வடக்கு கடல் பகுதியில் இருந்து தென்கடல் பகுதிக்கு பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.

Tags : Pamban Bridge ,Mumbai , Pamban
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!