×

கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது...!! முதல்கட்ட சோதனை முடிவில் ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகிவுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.  

கொரோனா தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் கண்டறியும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பு மருந்தின் முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது.
மூன்று வகையான ஃபார்முலாக்களும் நோய் எதிர்ப்பு சக்தி பலனை அளித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி தற்போது 3ம் கட்ட மனித உடலில் செலுத்தும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதில் சுமார் 26,000 பங்கேற்றிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Tags : Kovacs ,ICMR , Kovacs vaccine boosts immunity ... !! ICMR information at the end of the first test
× RELATED இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு...