×

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி!: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் சட்டப்பேரவை அலுவலகம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. புதுச்சேரி மாநில முதலமைச்சராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில் சட்டப்பேரவையில் உள்ள ரங்கசாமியின் அலுவலகம் மற்றும் செயலாளர் அலுவலகம் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் இன்று ஒருநாள் மூடப்படுவதாகவும், அலுவலக ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். 
கொரோனா வைரஸானது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வரும் நிலையில் புதுச்சேரி முதலைச்சரையும் அந்த கிருமி விட்டுவைக்கவில்லை என்பது நினைவில் கூறத்தக்கது. 

The post புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி!: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் சட்டப்பேரவை அலுவலகம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Corona ,Puducherry State ,Legislation Office ,Law ,Office for Cleaning ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி