சென்னை, டிச.17: வடசென்னை மாவட்டத்துக்குகு புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிகவின், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.செந்தில்குமார் நியமிக்கப்படுகிறார். வடசென்னை கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக எம்.வேல்முருகன் நியமிக்கப்படுகிறார். இம்மாவட்டத்துக்கு, கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.