×

முன்னாள் நீதிபதி கர்ணன் மீதான வழக்கு டிஜிபி, போலீஸ் கமிஷனர் ஐகோர்ட்டில் விளக்கம்

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வழக்கு தொடர்பாக டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஐகோர்ட்டில்நேற்று ஆஜரானார்கள்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.கர்ணன் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கர்ணன் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பார்கவுன்சில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நேரில் ஆஜராகி நீதிபதிகளிடம் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு மற்றும் அதன் விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

Tags : Karnan DGP ,Commissioner of Police , Case against former Judge Karnan DGP, Commissioner of Police interpretation in iCourt
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...