கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் பெரியாறு அணையில், கேரள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒரு எஸ்ஐ, ஒரு சிறப்பு எஸ்ஐ, 5 தலைமை காவலர்கள், 18 போலீசார் என 25 பேர் உள்ளனர். இவர்களில் 2 கேரள போலீசாருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது 12 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது 2 நாட்களுக்கு முன்பு உறுதியானது. கேரளாவில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அணைப்பகுதியில் உள்ள தமிழக அதிகாரிகள், தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். நேற்றைய பரிசோதனையில் தமிழக தொழிலாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.