சென்னை: தமிழகம் முழுவதும் 127 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.7 கோடி
லஞ்சப்பணம் சிக்கியது. கணக்கில் வராத 7 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி 10
கேரட் வைரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 01.10.2020 முதல்
14.12.2020 வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.