டெல்லி: விவாகரத்து முறைகளில் ஒரே விதமான சட்டமுறைகளை உருவாக்க கோருவது பற்றி பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து, ஜீவனாம்சம் விவகாரங்களில் மத ரீதியிலான சட்டங்களாக இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் தேவை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.