×

கொல்லிமலையில் தொடர்மழை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தரைபாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் ஆங்காங்கே உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அரப்பளீஸ்வரர் கோயில் அருகிலுள்ள சினி பால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த இரண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, அருவியின் அருகில் செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செய்த பலத்த மழையின் போது, அந்த தரைப்பாலம் சேதம் அடைந்து விட்டது.

இதுநாள் வரை பாலங்கள் சரி செய்யப்படவில்லை. இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அருவிகளில் குளிக்க செல்லும் பாதையில் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே,  மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த இரு அருவிகளிலும் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ganga ,sky , Aerial Ganga Falls
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை