×

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம் : கமல்ஹாசன் உறுதி!!

நெல்லை : மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார்.சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் இன்று நெல்லையில் பரப்புரையை மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும்.லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்; இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மையத்தின் ஆசை.

அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை ; என்னை யாரும் இயக்கவும் முடியாது. எங்கள் சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டார்ச்லைட் சின்னத்தை நியாயமான முறையில் போராடி பெறுவோம். சட்டப்படி டார்ச் லைட் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம். ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்.மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் 3வது அணி அமைய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.காந்தியாரின் பி-டீமாக தான் நாங்கள் இருப்போம்; வேறு யாருக்கும் நாங்கள் பி-டீம் அல்ல, என்றார்.


Tags : People's Justice Center ,Kamal Haasan ,housewives , People's Justice Center, pay, Kamalhasan, commitment
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...