சென்னை:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் துறைகளின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் 200 வார்டுகளிலும் விரிவுபடுத்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலம் முழுவதும் 1, 7,933 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 1,266.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.