சென்னை: திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: திரையுலகில் புகழ் பெற்றவர்களை பின்னிருந்து இயக்கும் வேலையைச் செய்துவரும் மதவாதக் கட்சியினர், அதற்கு ஆன்மீக அரசியல் என்று பெயர் சூட்ட வைத்துள்ளனர். மிக விரைவில் பாஜ-வை போல தமிழ்நாட்டில் ஒரு தமிழ் ஜனதா கட்சி உருவாக்கலாம். எனவே, கருத்தியல் அடிப்படையில் அதனை எதிர்ப்பதற்கும், உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு கூட்டமைப்பு உடனடியாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பெரியார் நினைவு நாளான வரும் 24ம் தேதி அரசியலில் ஏன் ஆன்மீகம் - எதிர்ப்புக் கூட்டியக்கம் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சமூகநீதி அரசியலை முன்னெடுக்கும் திமுக கூட்டணியை வரும் தேர்தலில் முழுமையாக ஆதரிப்பதும் இந்த கூட்டியகத்தின் நோக்கங்களாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.