×

மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் பங்கேற்க இங்கி. பிரதமர் போரிஸ் சம்மதம்

புதுடெல்லி:கடந்த மாதம் பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான தொலைபேசி உரையாடலின்போது, 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க போரிஸ்  ஜான்சனுக்கு மோடி அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, குடியரசு விழாவில் கலந்து கொள்ள போரிஸ் ஜான்சன் சம்மதித்துள்ளார். இத்தகவலை அந்நாட்டின் வெளியறவு துறை அமைச்சர் டொமினிக் ராப்  உறுதிபடுத்தி உள்ளார். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ராப் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர்.  ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘ போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா  வருகிறார். அதே போல, இங்கிலாந்தில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு போரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்,’’ என்றார்.



Tags : Ingi ,Modi ,celebrations ,Republic Day ,Boris , I accept Modi's invitation to attend Republic Day celebrations. Consent of Prime Minister Boris
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...