×

இன்று 23வது நாள் உண்ணாவிரதம்; முருகன், நளினி விடுதலையை தடுக்க சதி: வழக்கறிஞர் குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இன்று 23வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனது தாயார் மற்றும் மகளுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இன்று 23வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலையை சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு சிறை மருத்துவமனையிேலயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டதுடன், நேற்று மாலை முருகனுக்கு அரிசி கஞ்சி வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை முருகனையும், பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியையும் சந்தித்து பேசுவதற்கு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி வந்தார். ஆனால் அவருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிறைத்துறை ஊழலை கேட்க முயன்றதால் முருகனின் மீது பொய்யான காரணத்தை கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களது விடுதலையை தடுக்க முயல்கின்றனர். சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகிறார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவரை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Murugan ,release ,Nalini , Today is the 23rd day of fasting; Murugan, conspiracy to block Nalini's release: Attorney charges
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...