சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூரப்பா மீது ஏராளமான புகார்கள் இருப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக சூரப்பா துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.