×

சேரங்கோடு பகுதியில் காட்டு யானையை பிடிக்க முதுமலையில் இருந்து 3 கும்கிகள் வரவழைப்பு

நீலகிரி: சேரங்கோடு பகுதியில் 3 பேரைக் கொன்ற காட்டு யானையை பிடிக்க 3 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலையில் இருந்து வசீம், பொம்மன், சுஜய் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சேரங்கோடு தேயிலை தோட்டத்தில் தந்தை - மகனை நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கி கொன்றது. காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமிலிருந்து கும்கி யானையான கலீமும் கொண்டுவரப்பட உள்ளது. ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Tags : Kumkis ,area ,Mudumalai ,Serangode , Mudumalai, wild elephant
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!