×

சொத்துக்கு ஆசைப்பட்டு அக்கா சரமாரி குத்தி கொலை: தங்கை கைது கணவனுக்கு வலை

குன்றத்தூர்: சொத்துக்காக ஆசைப்பட்டு கணவனுடன் சேர்ந்து அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரை, வலைவீசி தேடி வருகின்றனர். மாங்காடு சந்திரசேக நகரை சேர்ந்தவர் குணசேகரன். துபாயில் வேலை செய்கிறார். இவரது மனைவி தெய்வானை (42). குணசேகரன் வெளிநாட்டில் வேலை செய்வதால், இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தெய்வானை, கணவருடன் வெளிநாட்டில் இருந்தார். சமீபத்தில் சென்னை திரும்பினார். தெய்வானையின் தங்கை லட்சுமி (40).

இவரது கணவர் ரமேஷ். தெய்வானை, துபாயில் இருக்கும்போது, தங்கை லட்சுமிக்கு மாதாமாதம் ஒரு தொகை அனுப்பினார். அந்த பணத்தில், ரமேஷ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய தெய்வானை, தங்கையின் கணவரின் நடவடிக்கைகளை அறிந்ததும், அவருக்கு, பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தெய்வானையின் மற்றொரு தங்கை, அவரை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், தெய்வானை எடுக்கவில்லை. இதையடுத்து அவர், லட்சுமியுடன் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது, ரத்த வெள்ளத்தில், தெய்வானை சடலமாக கிடந்தார். மர்மநபர்கள் பின்பக்க சுவர் ஏறி குதித்து, உள்ளே நுழைந்து தெய்வானையை கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்பட்டது.

தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கணவருடன் துபாயில் இருந்த தெய்வானை, மாதம் ஒரு தொகையை தங்கை லட்சுமிக்கு அனுப்பினார். சமீபத்தில் தெய்வானை சென்னை திரும்பிய பிறகு, லட்சுமிக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து லட்சுமியின் கணவன் ரமேஷ், அடிக்கடி குடித்து விட்டுவந்து தகராறு செய்ததால் சொத்தில் பங்கு தர முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, கணவன் ரமேஷூடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு சுவர் ஏறி குதித்துள்ளார். அவர்களை பார்த்த தெய்வானை, அலறி கூச்சலிட்டார். உடனே லட்சுமி, தெய்வானையின் வாயை பொத்திக் கொள்ள, ரமேஷ் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் இருவரும் தப்பினர். ஆனால், அவர்கள் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், லட்சுமியை செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்துக்கு ஆசைப்பட்டு கணவனுடன் சேர்ந்து அக்காவை தங்கை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sister ,death , Sister stabbed to death for want of property: sister arrested husband web
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...