×

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. அமைதியான முறையில் தொடங்கியுள்ள போராட்டத்தை தமிழக அரசு, காவல்துறை மூலம் சீர்குலைத்து, சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அமைதிமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.இதில் காவல்துறையின் அத்துமீறல் தொடருமானால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Police Violation in Pro-Farmers Struggle: Mutharajan Accused
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...