×

வீடியோ வெளியிட்ட விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணன் ஜாமீன் கோரி மனுதாக்கல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்க நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், நீதிபதி கர்ணன். இவர் சமீபத்தில் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து யூடியூப்பில் கருத்து தெரிவித்திருந்தார். இது நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பார்கவுன்சில் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2ம் தேதி முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது. இந்தநிலையில் கர்ணன் தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Karnan , Former judge Karnan has filed a petition seeking bail in the case
× RELATED கம்பர் – இராமாவதாரம்