×

நாளை முதல் வைணவ திருத்தலங்களில் 30 நாட்கள் திருப்பாவை சொற்பொழிவு: 25ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாளை தொடங்கி வரும் ஜனவரி 14ம் தேதி வரை திருப்பாவை சேவிப்பு மற்றும் சொற்பொழிவு நடக்கிறது.
 மார்கழி மாதம் தொடங்கினாலே அனைத்து வைணவ திருத்தலங்களிலும் வில்லிபுத்தூர் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் ஒப்புவித்தல் மற்றும் சொற்பொழிவு நடக்கும். அதிகாலையில் பெண்கள், ஆடவர் குளித்து விட்டு கோயிலுக்கு சென்று திருப்பாவை பாடுவார்கள். மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவையை சேவித்தால் இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.  பெங்களூரு மாநகரின் மகாலட்சுமி புரத்தில் உள்ள இஸ்கான் கோயில், வயாலிகாவலில் உள்ள திருமலை-திருப்பதி கோயில், சிட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள கோட்டை வெங்கடரமணசாமி கோயில், மாகடிசாலை ரயில்வே குடியிருப்பில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயில், அதே பகுதியில் உள்ள உக்ர நரசிம்மசாமி கோயில், காட்டன்பேட்டையில் உள்ள ஆதிநாராயணசாமி கோயில். வெங்கடரமணசாமி கோயில்.

அக்கி பேட்டையில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோயில், மரியப்பனபாளையத்தில் உள்ள வெங்கடரமணசாமி கோயில், மகாலட்சுமி லே அவுட்டில் உள்ள வெங்கடேசபெருமாள் கோயில், கமலாநகரில் உள்ள ரங்கநாதசாமி கோயில், விஜயநகர், நாகரபாவி மெயின் ரோட்டில் உள்ள லட்சுமி வெங்கடஷ்வரசுவாமி கோயில், மாலூரில் உள்ள சிக்க திருப்பதி, அல்சூர் வரதராஜ பொருமாள் கோயில், சொக்கநாத பெருமாள் கோயில், ஆல்சூரில் உள்ள வெங்கடரமணசாமி கோயில்.
தங்கவயலில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசாமி கோயில், கென்னடீஸ் வட்டத்தில் உள்ள ராமானுஜர் சித்தாந்த சபை, நம்மாழ்வார் சன்னதி, பாலகாட் வட்டத்தில் உள்ள வேணுகோபால கண்ணபிரசான் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மாரிகுப்பத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி, பட்டகார் வீதியில் உள்ள கண்ணபிரான் சன்னதி, ஆர்.டி.பிளாக்கில் உள்ள மணவாளமாமுனி சன்னதி, சையனைடு லைனில் உள்ள நம்மாழ்வார் சன்னதி, மதுரகவியாழ்வார் சன்னதி, கில்பர்ட்ஸ் பகுதியில் உள்ள குலசேகர ஆழ்வார் சன்னதி.

சாம்பியன் பகுதியில் உள்ள வரதராஜபெருமாள் சன்னதி, உரிகம் பகுதியில் உள்ள தொண்டரடி பொடி ஆழ்வார் சன்னதி, என்.டி.பிளாக்கில் உள்ள கண்ணபிரான் சன்னதி, ஆண்டர்சன்பேட்டையில் உள்ள நம்பெருமாள் சன்னதி, என்றீஸ் வட்டத்தில் உள்ள மணவாள மாமுனி சன்னதி, கோரமண்டல் டாங்க் பிளாக்கில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் உள்பட பல திருத்தலங்களில் ஆண்டாள் திருப்பாவை சேவிக்கப்படுகிறது. மேலும் இம்மாதம் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில் மேற்கண்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பதுடன் சொர்க்க வாசல் திறப்பும் நடக்கிறது.

Tags : 30 Day Turnaround Sermon on Vaishnava Corrections from Tomorrow: Heaven's Gate Opening on the 25th
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!