சென்னை: சென்னை 17 வயது மாணவியை கடத்திச்சென்ற வழக்கில் தலைமை காவலர் மகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூரை சேர்ந்த மாணவியை கடத்தியதாக புஜ்ஜிபாபு என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது. கைதான புஜ்ஜிபாபுவின் தந்தை, சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.