×

அம்மா மினி கிளினிக்குகள் தொடக்கம்; தமிழக அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தினக் கல்: துணை முதல்வர் ஓபிஎஸ் பெருமிதம்

சென்னை : அம்மா மினி கிளினிக்குகள் தமிழக அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தினக் கல்லாகப் பிரகாசித்துக் கொண்டிருகிறது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் இன்று (டிச.14) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஏழை மக்களின் நல்வாழ்வினையும், அவர்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதையும் உன்னத குறிக்கோளாக கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்  திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மாவின் அரசானது சீரிய பல திட்டங்கள் தீட்டி திறன்பட செயலாற்றி வருகிறது.
·    
கொடிய நோயான கொரோனாவால் உலகில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு அவற்றுடன் போராடி வரும் வேளையில் நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழகம் அந்நோய் தாக்குதலில் இருந்து மிக வேகமாக மீண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியதாக சாதனை படைத்திருக்கிறோம்.. நோய் தொற்றின் உச்சமாக நாள் ஒன்றுக்கு 6000 க்கும்  மேல் இருந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நேற்று 1000 என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது.

நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் நம் அம்மாவின் அரசு இக்கொரோனா நோய் கட்டுப்பாட்டில் நாம் கையாண்ட அணுகுமுறைகளையும் தீவிரத்தையும் வெகுவாக மனம் திறந்து பாராட்டியிருகிறார்கள் என்பதை இந்த நல்ல நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

தாயுள்ளம் கொண்ட நம் அம்மாவின் அரசு நோய் தொற்றுக்களை கண்டறிவதில் காட்டிய மிக துரிதமான செயல்பாடு, மிகச் சிறந்த பரிசோதனைக் கருவிகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் மூலம் வழங்கப்பட்ட துல்லியமான உயர்தர சிகிச்சை ஆகியவற்றால் இந்நோய் நம் கட்டுக்குள் வந்துள்ளது.கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் கோவிட்-19, பெருந்தொற்று நோய் சீனாவில் கண்டறியப்பட்டவுடன், மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம், 1939-இன் கீழ் கொரோனா வைரஸை  நோய்தொற்றாக அறிவித்தது.

இந்நோய் தடுப்பதற்கு தேவையான வழிகாட்டுதலை கொள்ளை நோய்சட்டம், 1897-இன் கீழ் இந்நோய்க்கான அறிவிக்கை அன்றே அரசு வெளியிட்டது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தேவையான தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை மிகவும் கவனமாகவும்,  பாதுகாப்பாகவும்  அமல்படுத்தி வருகிறது.  
·    இதுவரை 228 பரிசோதனை நிலையங்கள்அமைக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக அளவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70,000  சுகூ-ஞஊசு பரிசோதனைகள் நமது தமிழ்நாட்டில் தான் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் இதில் 67 அரசு பரிசோதனை நிலையங்கள் உள்ளடகியது என்கிற சாதனையை நிகழ்த்தியிருகின்றோம்.

கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக தேவைப்படும் உயிர் காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் குறிப்பாக ஞஞநு முவைள, சூ-95 ஆயளமள, கூசiயீடந டுயலநச அயளமள முதலியன துரிதமாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, களத்தில் பணியாற்றி கொண்டிருகின்ற களப்பணியாளர்களுக்கு போதுமானஅளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முழுவதும் 310 அரசு மருத்துவமனைகள் மற்றும் 343 தனியார் மருத்துவமனைகள் என 653 மருத்துவமனைகளில் 56,580 படுக்கை வசதிகள் மற்றும் 6,517 செயற்கை சுவாசக் கருவிகளுடன் கோவிட்-19 நோய் தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இதில் சென்னையில் மட்டும் 102 மருத்துவமனைகள் உள்ளன.மேலும் சிறப்பு அம்சமாக தமிழ்நாட்டில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றும் லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை செய்ய தமிழ்நாடு முழுவதும் 1,643 கோவிட்-19 சிறப்பு மையங்கள் கண்டறியப்பட்டு 1,617 செயல்பட்டு வருகின்றன.  இம்மையங்களில் 83,477 படுக்கைகள் உருவாக்கப்பட்டிருகிறது.
    
நோய் உள்ளவர்களை தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் இதுவரை 5.73 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 12.08 லட்சம் மக்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு  சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தகுந்த  முகக் கவசங்களை வழங்கும் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
·    
பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிகமாக இருந்த தொற்று எண்ணிக்கை,  வீடு வீடாக சென்று நோய்த் தொற்று உள்ளதா என கண்டறிதல், கூடுதலாக பணியாளர்கள் நியமித்தல், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் போன்றவற்றால் இன்று நோய் நம்முடைய சென்னை மாநகரத்தில்  கட்டுக்குள் வைக்கப்பட்டிருகிறது.  
தமிழக மக்கள் நல்வாழ்வையே தன் வாழ்வு முழுவதிலும் நோக்கமாக கொண்டு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த தியாக தெய்வம் நம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் வீர நடை போடும் நம்முடைய அரசு, இம்மருத்துவ சேவையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வகையில்,அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களைத் தேடி வரும் அம்மாவின் நல்அரசு என்ற நிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருகிறது என்பதனையும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைவருக்கும் நலவாழ்வு என்ற கோட்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் இரண்டாயிரம் முதலமைச்சரின் மினி கிளினீக் ஏற்படுத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு தற்போது முதற்கட்டமாக  இங்கு திறக்கப்படவுள்ளது.

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழை,  எளிய மக்களுக்கும் உடனடியாக மருத்துவ சேவை சென்றடையும் வகையிலும், கொரோனா நோய்த் தொற்று குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை எளிய முறையில் வழங்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருந்தாளுநர் இந்தமினி கிளீனிக் ல் செயல்படுவார். தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் இது ஒரு மைல் கல் மட்டும் அல்லாது அம்மா அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தின கல்லாh இன்றைக்கு பிரகாசித்து கொண்டிருகிறது.

·தற்போது முகக் கவசம் கட்டாயம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் கைகளை முறையாக கழுவுதல் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே நோய்ப் பரவலை நம்மால் தடுக்க முடியும். எனவே, பொது மக்கள் தவறாது இவ்வறிவுரைகளை பின்பற்றிடுமாறு நான் அவர்களை அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசோடு தோளோடு தோள் நின்று கடமையே உயிர் மூச்சாக அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் பணி ஆற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உணவுவழங்கல்துறை, சத்துணவு, குடிசை மாற்று வாரியம், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுத் துறையினர் ஆகியோரது சேவையை  மீண்டும் இதய பூர்வமாக மனதார பாராட்டி உங்களது சேவை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்

Tags : clinics ,Mom ,Deputy Chief Minister ,Government of Tamil Nadu ,OBS , Deputy Chief, OBS, proud
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு