சென்னை: பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சா, மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தவிர்த்த படிப்புக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.