×

8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழக சுற்றலா தலங்கள் திறப்பு

சென்னை: 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர் செல்ல அனுமதி இல்லை.


Tags : Tourist sites ,Tamil Nadu ,Marina Beach , Tourist sites in Tamil Nadu, including Marina Beach, open after 8 months
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...