×

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் காத்திருப்பு போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி நவம்பர் 26 தேதியில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 14ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் மதிமுக ஆதரவை வழங்குகிறது.காத்திருப்பு போராட்டங்களில் மதிமுக விவசாய அணியினர் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : announcement ,Tamil Nadu ,Vaiko , Madhyamaka supports waiting struggle in Tamil Nadu in support of farmers: Vaiko announcement
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...